தொடர் விடுமுறை எதிரொலி!...குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம்,  குற்றாலத்தில் பிரபல சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். இங்கு குற்றால சீசன் காலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் போது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தென்காசி, பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அருவிகளில் நீர்வரத்து தற்போது சீராக இருக்கும் நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை முதலே  குற்றாலம் மெயின் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளியல் போட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பை தொடர்ந்து, போலீசார்  தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A series of holiday echoes crowds of tourists flocking to coutralam waterfalls


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->