ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் ஒரு அதிரடி! சற்றுமுன் போலீசார் எடுத்த நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் தடுப்பு சட்டம் பயந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில், ரவுடி புதூர் அப்பு  மீது குண்டர் தரும் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது புதூர் அப்பு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 26 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Armstrong case Puthur appu Gundas


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->