பிரதமர் மோடியின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கும் - நடிகர் ரஜினிகாந்த் கருத்து! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று மாலை பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முன்னிலையில் 3வது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது, "பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்க உள்ளது மிகப்பெரிய சாதனை.

அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்கள் இந்த மக்களவைத் தேர்தலில் மிகவும் வலுவான ஒரு எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதை நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இதையடுத்து பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டு ஆட்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நன்றாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று ரஜினிகாந்த பதில் அளித்துள்ளார். 

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SuperStar RajiniKanth Says About PM Modis Regime


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->