மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டுவோம்..அசாம் முதலமைச்சர் சர்ச்சை பேச்சு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில், 5ம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி உள்ளது. அந்தவகையில், அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா.

அந்த வகையில், பிரச்சாரத்தில் மக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசுகையில், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 300 சீட்டுகளை வென்றோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினோம் இந்த முறை நானூறு சீட்டுகளை வென்று ஞானவாயி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோவிலும் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலையும் கட்டுவோம் என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temple where there is a mosque Assam Chief Minister controversial speech


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->