#BigBreaking || தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு : தமிழக அரசுக்கு பேரிடி கொடுத்த உச்சநீதிமன்றம்.! அதிரடி உத்தரவுகள்.! - Seithipunal
Seithipunal



கடந்த மாதம் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஸ்துவ பள்ளியில் படித்துவந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

மேலும் தன மரணத்துக்கு காரணம், மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளதாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று, அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி  உத்தரவு பிறப்பித்தது. 

இதனையடுத்து, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே தமிழக அரசு சார்பில் முறையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை என்பது தேவை இல்லை. இந்த வழக்கு அரசியல் காரணமாக திசைமாறி செல்வதாக" தமிழக அரசு வழக்கறிஞர் தந்து வாதத்தை முன்வைத்தார்.

இதனையடுத்து, மாணவியின் தந்தை முருகானந்தம் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் தற்போது சிபிஐ வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்ற உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

4 வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thanjai school girl suicide case in issue feb 14


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->