#BREAKING || காங்கிரஸ் கட்சியின் ''முக்கிய புள்ளி'' காணவில்லை.. போலீசில் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் போலீசில் புகார் அளித்து இருந்த நிலையில் தற்போது காணாமல் போய்யுள்ளார்.

ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரில் கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் மகன் கருத்தையா ஜாஃப்ரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போய் இருப்பது அம்மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunelveli East district president jayakumar Missing


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->