த.வெ.க மாநாடு - அனுமதி கேட்டு மீண்டும் மனு! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி மீண்டும் விழுப்புரம் காவல்துறையிடம் அக்கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கடந்த மாதம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருந்த நடிகர் விஜய், இந்த மாதமே கட்சியின் முதல் மாநாடு நடைபெறுவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி வருகின்ற 23 அல்லது 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்ததால் மாநாடு உடனடியாக நடத்த முடியாமல் தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் 
கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதனை அடுத்து விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடக்க உள்ள மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Manadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->