தென் தமிழகத்திற்கே பேராபத்து.. கூடங்குளம் அணு உலையை உடனே மூடுங்க.! - வைகோ எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கூடங்குளம் அணு உலைகளை மூடி தென் தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜப்பானின் புக்கிஷிமா அணு உலை அமைக்கப்பட்ட போது பொதுமக்கள் எதிர்த்த நிலையில் தற்போது அணுக்கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்து விடுவதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று கூடங்குளம் அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணு உலை கழிவு நீரை வங்கக்கடலில் தான் திறந்து விடுவார்கள். இடிந்தக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழியும் நிலை ஏற்படும். 

இதற்கு கூடங்குளம் அணு உலைகளை மூடுவது தான் எதிர்காலத்தில் தென் தமிழகத்தை பாதுகாப்பதற்கான தீர்வாக இருக்கும். இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மத்திய அரசுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன்" என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko insisted Kudankulam Nuclear Reactor should be shut down


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->