பாகிஸ்தான் சிறிய நாடு.. போர் தேவையில்லை.. திருமாவளவன் அதிர்ச்சி பேட்டி!
VCK Thirumavalavan Say INDIA PAK war no need
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில், மத்திய அரசின் செயல்பாடுகள் மீது கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.
370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, காஷ்மீர் முழுமையாக பாதுகாப்பானது என பாஜக அரசு பலமுறை அறிவித்தது. அச்சமின்றி சுற்றுலா செல்லலாம் எனக் கூறியதற்கேற்ப மக்கள் அங்கு பயணம் செய்தபோது இத்தகைய கொடூர சம்பவம் நடந்தது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதுபோல், தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும், தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.
மே 31ஆம் தேதி திருச்சியில் வக்ஃப் சட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானை குறிவைத்து போராக மாற்றக்கூடாது என்றும், அந்த நாடு ஆதரவு தரும் தகவல்கள் இருந்தால், அதை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யுத்தம் என்பது தேவையற்றது எனவும், சமூக ஒற்றுமையே நாட்டின் பேரொளியாக இருக்க வேண்டுமென கூறினார்.
மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவில்லை; மாறாக அதனை ஊக்குவித்துள்ளன என்றார். இது மதத்திற்கேதிரானதல்ல; மத்திய ஆட்சியை நோக்கியதெனவும், சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கையாகவே அமைந்ததெனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
English Summary
VCK Thirumavalavan Say INDIA PAK war no need