சமத்துவம் தழைக்க - சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


'காலனி' எனும் சொல்லை திராவிட மாடல் அரசு நீக்கவிருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

'பெயர்களில் இருந்த சாதி ஒட்டினை ஒழித்த திராவிட இயக்கத்தின் வழியில், ஊர்களில் இருக்கும் 'காலனி' எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது நம் நம் திராவிட மாடல் அரசு. 

முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலினின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்கிறோம். ஈராயிரம் ஆண்டுகள் இறுகிப்போய் இருக்கும் சாதியை வீழ்த்துவதற்கான பயணத்தில் முக்கிய மைல்கல் இது. சமத்துவம் தழைக்க - சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்.' என்று தெரிவித்துள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We will work with determination to establish equality to establish a caste-free society Udhayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->