டிடிவி தினகரன் விடுத்த அன்பு வேண்டுகோள்.! தயாராகும் சென்னை அலுவலகம்.! - Seithipunal
Seithipunal


மார்ச் 8-ல் மகளிர் தின விழா கொண்டாட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார் என்று, அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த அறிவிப்பில், உலகை இயக்குகிற உன்னத சக்தியாக, வற்றாத அன்பின் வடிவமாக, ஆற்றலின் பேருருவமாகத் திகழும் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக மார்ச் 8-ம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பெண்குலத்திற்கு பெருமை சேர்த்த பெருந்தலைவி, ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கியிருக்கிற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. மார்ச் 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக மகளிர் அணி, கழக இளம்பெண்கள் பாசறை, கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள அனைத்து நிலையிலான மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்றிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women day at chennai ammk office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->