பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஆயுதப்படை தொழிற்சாலை ஊழியரை கைது செய்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு உளவாளியாக செயல்பட்டு முக்கிய தகவல்களை பகிர்ந்த உத்தரப் பிரதேசத்தின் ஆயுதப்படை தொழிற்சாலை ஊழியரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

உ.பி.,யின் பிரோஷாபாத் நகரில் ஆயுதப்படை தொழிற்சாலையில் பணிபுரிபவர் ரவீந்திர குமார்.இவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவாளி ஒருவன் நேஹா சர்மா என்ற பெயரில், ரவீந்திர குமாருடன் பேஸ்புக் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளான்.

அதன் பிறகு இருவரும் வாட்ஸ் ஆப் மூலம் பேசி வந்துள்ளனர். அப்போது தொழிற்சாலை குறித்த பல முக்கிய தகவல்களை ரவீந்திர குமார், நேஹா சர்மாவிடம் பகிர்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தொழிற்சாலை தொடர்பான ரகசிய தகவல்கள் கசிவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, தகவல்களை பகிர்ந்து வந்தது ரவீந்திர குமார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். முதலில் ஆக்ராவில் உள்ள அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. பிறகு லக்னோவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் போது அவரிடம் உள்ள மொபைல்போனில் ஆய்வு செய்துள்ளனர். அதில், முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரவீந்திர குமார் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Anti Terrorism Squad has arrested an Ordnance Factory employee who spied for Pakistan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->