காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது குற்றமில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


இளம் பருவத்திவர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது குற்றமில்லை என்று, காதல் விவகார வழக்கு ஒன்றில் தீர்ப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மேலும், காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக இளம் பெண் அளித்த புகாரில், இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாகவும், காதலிக்கும் போது கட்டிப் பிடித்து முத்தமிட்டார் என இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இளம்பெண் அளித்த இந்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர்.

இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இளம் பருவத்தினர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது என்று கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC Division judgment for Lovers hug kiss issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->