திருப்பதியில் 4 நாட்களாக கூட்டம் அலைமோதிய பிறகு இன்று பக்தர்கள் கூட்டம் குறைந்தது..! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும்,காத்திருப்பு அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்தது. இதில், சுமார் 2 கிமீ தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இதனால் திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் காணப்பட்டனர். இதன் காரணமாக இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. மேலும், இன்று காலை 6 மணி நிலவரப்படி 7 அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்தனர்.

இதனால் விரைவாக தரிசனம் செய்து வருவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.கொரோனா காலத்தில் நடைபாதையில் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டது.

மீண்டும் நேர ஒதுக்கீடு டோக்கன்களை வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, திருப்பதியில் நேற்று 82,746 பேர் தரிசனம் செய்தனர். மேலும், 25.078 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். இதன் காணிக்கையாக உண்டியலில் ரூ.3.85 கோடி வசூலானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After 4 days crowds Tirupati number devotees has decreased today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->