திருவாதிரை விரதம் எப்படி இருக்க வேண்டும்? யார் எடுக்க வேண்டும்? - Seithipunal
Seithipunal


தமிழ் மாதங்களில் ஒன்றான மார்கழி மாதம் இறைவனுக்கு உகந்த மாதமாகும். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த சிறப்பு மிகுந்த நாளாகும். அன்றைய தினம் திருமணமான பெண்கள் மாங்கல்ய நோன்பு இருப்பர். அப்படி விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவாதிரை விரதம் இருப்பது எப்படி?

புதிதாக திருமணமான பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்து, உறவினர்களையும் அழைத்து திருவாதிரை விரதம் இருந்து பூஜை செய்து தாலி சரடு மாற்றுவார்கள். நோன்பிருக்கும் பெண்கள் திருவாதிரை அன்று அதிகாலை 5 மணிக்கு பட்டினி சோறு உண்டு ஆரம்பிப்பார். 

பகல் முடிந்து இரவு வந்ததும் பூஜைகள் ஆரம்பமாகும். திருவாதிரைக்கு பிரசித்தி பெற்ற களி, 18 வகை காய்கறி கூட்டு மற்றும் பச்சரிசி அடை அனைத்தும் நெய்வேத்தியமாக வைத்து படைத்து, சந்திரனை வழிபட்டு விரதம் முடிப்பர்.

பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் தாலியை கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவது உத்தமம். இதனால் இவர்களுக்குள் நெருக்கம் பெருகி ஒற்றுமை நிலைக்கும் என்பது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to pray thiruvathirai fasting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->