வறுமையை போக்கி..செல்வத்தை பெருக்கும்..பஞ்ச கவ்ய விளக்கு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மனிதர்களும் பல்வேறுவிதமான அதிர்வுகளை வெளியிடுகின்றனர். மகிழ்ச்சியாக இருக்கும்போது நேர்மறையான அதிர்வலைகள் வெளியே வரும். அதுவே சோகம் அல்லது கோபமாக இருக்கும்போது எதிர்மறை அதிர்வுகள் வெளியே வரும்.

இதற்கு சிறந்த உதாரணம் நாம் அனைவரும் சேர்ந்து கோயிலில் கூட்டு பிரார்த்தனை செய்யும்போது அது பழித்துவிடும். காரணம் அனைவரும் சேர்ந்து வெளியிடும் நேர்மறை அதிர்வு.

அதேபோல் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் எதிர்மறை அதிர்வுகளை வெளியிட்டால் அந்த எதிர்மறை அதிர்வு நிச்சயம் நம் வளர்ச்சியை பாதிக்கும். இதற்கு நாம் செய்ய வேண்டியது நம்மை சுற்றி நேர்மறை அதிர்வுகளை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் கடைபிடிக்க வேண்டியது, நம் முன்னோர்கள் கடைபிடித்த அதே வழிமுறையைத்தான்.

அக்னிஹோத்ரம் :

அக்னியாகம் எனப்படும் அக்னிஹோத்ரம் என்பது ஆகச்சிறந்த வேள்வியாக கருதப்படுகிறது. அக்னிஹோத்ரம் செய்ய பசு சாணமும், பசு நெய்யும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல் அக்னிஹோத்ரம் செய்ய சரியான நேரம் காலை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்களில் செய்ய வேண்டும். ஆனால், இன்று இருக்கும் இந்த வேகமான காலக்கட்டத்தில் இந்த அக்னிஹோத்ரம் செய்ய போதிய நேரம் இருப்பதில்லை. ஆகவே, இந்த பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது யாகம் செய்யும்போது கிடைக்கும் அதே நன்மைகள் இதில் கிடைக்கிறது. இதனால் நமக்கு முக்கிய தேவைகளான ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் இவை அனைத்தும் தடங்கல் இன்றி நம்மை தேடி வரும்.

பஞ்சகவ்ய விளக்கை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்கவும். பின் அதன்மேல் பஞ்சகவ்ய விளக்கை வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.

இந்த விளக்கின் திரி எரிந்த பின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். விபூதி தயாரிப்பில் பஞ்சகவ்யமும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த திருநீறை பூசிக் கொள்வதாலும் நன்மைகள் ஏற்படும்.

பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றி வந்தால் ஏற்படும் நன்மைகள் :

வீட்டில் இருக்கும் தீய சக்தியை போக்கும்.

வீட்டில் நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும்.

கடன் பிரச்சனையை போக்கும்.

குடும்பத்தில் உள்ள வறுமையை போக்கி செல்வ வளத்தை பெருக்கும் 

பஞ்சகவ்ய விளக்கில் பயன்படுத்தப்படும் சாணம் ஒரு கிருமிநாசினி என்பதால் அதை எரிக்கும் பொழுது காற்றில் உள்ள கிருமிகள் அழியும். நினைத்த காரியங்கள் நினைத்த வண்ணமே நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pancha kavyavilakku special


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->