சபரிமலை ஐயப்பன்..!!! நாளை விசுக்கனி தரிசனம் காண கோவிலில் குவிந்த பக்தர்கள்...!
Sabarimala Ayyappa Devotees thronged temple Vishukani darshan tomorrow
கடந்த 1-ந்தேதி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. பின்னர் மறுநாள் அதாவது 2-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

இதில் 10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் தற்போது சித்திரை விசுக்கனி தரிசனம் நாளை அதாவது 14-ந்தேதி நடைபெறவுள்ளது.
இந்தச் சிறப்பு தரிசனம் முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.இதில் நாளை காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குகின்றனர்.
மேலும் காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம் என கோவில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் சபரிமலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.
இதனால் வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அத்துடன், அன்று இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Sabarimala Ayyappa Devotees thronged temple Vishukani darshan tomorrow