13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 47 வயது தொழிலாளி கைது! - Seithipunal
Seithipunal


13 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையை சேர்ந்த தம்பதியினர் வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினர்  தங்களது 13 வயது மகளுடன், பஞ்சாலை அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்து உள்ளனர். இந்தநிலையில் வீட்டில் இருந்த மகள் திடீர் என மாயமாகியுள்ளாள்.  இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் மகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிறுமி மாயமான அன்று வீட்டின் அருகில் வசித்து வந்த மில் 47 வயதான தொழிலாளி ராபர்ட் கிளைவ்என்பவரையும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ராபர்ட் கிளைவ்  தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்ததும், அவருடன் சிறுமி இருப்பதும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக ராபர்ட் கிளைவை பிடித்து விசாரித்ததில்  சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.மேலும் சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராபர்ட் கிளைவை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

47-Year-Old Man Arrested For Sexually Assaulting 13-Year-Old Girl


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->