போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த பயணி..இனிமா கொடுத்து வெளியே எடுத்து போலீசார்!  - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த பயணியை போலீசார்  கைது செய்தனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடியே 85 லட்சம் ஆகும்.

 வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி மும்பை விமான நிலையத்திற்குவருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, உகாண்டா நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் மீது  சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளில் சோதனை செய்தனர் . ஆனால் இதில் எந்த பொருளும் சிக்காததால் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்ததுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வந்தது உறுதியானது . இதையடுத்து டாக்டர்கள் இனிமா கொடுத்து அவரது வயிற்றில் இருந்த 785 கிராம் கோகைன் என்ற போதைப்பொருளை வெளியே எடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடியே 85 லட்சம் ஆகும். மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The passenger who swallowed the drug and smuggled it. Giving it to the police and taking it out


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->