டிஜிட்டல் கைது - பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பண மோசடி..!
two peoples arrested for money fraud in odisa
ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கீதாஞ்சலி தாஸ். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என்றும், நீங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதால் டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.14 லட்சம் தருமாறும், அதில் ரூ.80 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை விசாரணைக்குப்பின் தருவதாகவும் தெரிவித்தனர். அதன் படி கீதாஞ்சலி தாஸ் பணத்தைக் கொடுத்துள்ளார். இதனை வாங்கி கொண்ட அவர்கள் கூறியதைப்போல பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதாஞ்சலி தாஸ், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி விசாரணை நடத்திய அதிகாரிகள், பண மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for money fraud in odisa