தோஷங்களை போக்கி.. வேண்டுதல்களை நிறைவேற்றும்.. பஞ்சகவ்ய விளக்கு..!! - Seithipunal
Seithipunal


பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பஞ்சகவ்ய விளக்கு..!!

எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வரவுக்கேற்ற செலவு சரியாக போய்விடும். மேலும், கையில் இருக்கும் தொகைக்கு மீறிய செலவு வந்துவிடும். வீட்டிலும் சரி, வியாபாரம் செய்யும் இடங்களிலும் சரி பணம் தங்காமல் கரைந்து கொண்டே இருந்தால் எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம்.

இதை அறிந்த முன்னோர்கள் வீட்டிலும், கோயில்களிலும் யாகம் அல்லது ஹோமம் நடத்துவதை வழக்கமாக கடைபிடித்து வந்தனர். ஆனால் இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் நிற்கவே நேரமில்லை. ஹோமம் நடத்துவது என்பது யோசிக்கக்கூடிய விஷயமே!.

ஆனால், ஹோமத்திற்கும் முன்னோர்கள் ஓர் எளிய வழியை வகுத்துதான் சென்றுள்ளார்கள். ஹோமம் நடத்துவதற்கு இணையாக பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபடும்போது உங்களது வேண்டுதல்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உடனடியாக கலந்து இறைவனின் அனுக்கிரகத்தை பெற்றுத்தரும் ஆற்றல் மிக்கதாகும். பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபடும் இடத்தில் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும்.

பசுவும், பசு தரும் பஞ்சகவ்யமும் தெய்வத்தன்மை கொண்டவை. மேலும், புனிதமானவை. பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததே பஞ்சகவ்யம்.

பஞ்சகவ்ய விளக்கு பயன்படுத்தும் முறை :

வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்து விட்டு, நெய் ஊற்றி திரிபோட்டு பஞ்சகவ்ய விளக்கை ஏற்றிவிட வேண்டும்.

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்கவும். பின் அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் மட்டும் எரிந்த பின்பு அணைத்து விடக்கூடாது. தீபத்தோடு சேர்த்து அந்த பஞ்சகவ்ய விளக்கும் ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும். எரிந்த சாம்பலை தினந்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனை தரும்.

எப்போதெல்லாம் பஞ்சகவ்ய விளக்கை ஏற்றலாம்?

இந்த விளக்கை தினந்தோறும் ஏற்றலாம் அல்லது வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றலாம்.

கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது பல மடங்கு நற்பலன்கள் உண்டாகும்.

பஞ்சகவ்ய விளக்கை நாள்தோறும் வீட்டிலும், வியாபாரம் செய்யும் இடத்திலும் ஏற்றி வழிபட்டு வரலாம்.

கோயிலுக்கு சென்று நவகிரகங்களுக்கு இந்த விளக்கை ஏற்றி வரலாம்.

பலன்கள் :

தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும்.

அனைத்து தோஷங்களும் விலகும்.

கண்திருஷ்டி மறையும்.

நினைத்த காரியங்கள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.

வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக செய்யும்.

கடன் பிரச்சனையை போக்கி பணவரவை அதிகரிக்க செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoshangalai pokum panjakavya vilakku


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->