கடன் மற்றும் நோய் தீர்க்கும் "விஷ்ணு சயன ஏகாதசி" அன்னதானம்.. !! - Seithipunal
Seithipunal



ஏகாதசி என்றாலே அது பெருமாளுக்குரியது என்று எல்லோருக்கும் தெரியும். பொதுவாகவே ஏகாதசி தினங்களில் செய்யும் அன்னதானமும், விரதமும் மோட்சத்தை அளிக்கும். பல்வேறு மகத்தான பலன்களைக் கொடுக்கும். பெருமாள் பக்தர்களுக்கு மிகவும் விசேஷமான ஒரு தினம் தான் இந்த ஏகாதசி தினம். 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து 11 நாட்களில் ஒரு ஏகாதசி வரும். அந்த வகையில் ஆண்டுக்கு 25 ஏகாதசிகள் வரை வரும். மேலும் இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். அதிலும் ஒவ்வொரு ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர் மற்றும் விரத பலன்கள் உள்ளன. 

அந்தவகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "விஷ்ணு சயன ஏகாதசி" என்று கூறப்படுகிறது. அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் பெருமாளும் பக்தர்களின் குறையைப் போக்குவார் என்றால் நம்ப முடிகிறதா? இன்று தான் விஷ்ணு சயன ஏகாதசி. இன்று பூஜையறையில் உள்ள பெருமாள் படத்திற்கு பொட்டிட்டு, துளசி மாலை சாற்றி, துளசி கொண்டு அர்ச்சனையும் செய்ய வேண்டும். மேலும் புளியோதரை அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்யலாம். 

முக்கியமாக பூஜையின் போது விஷ்ணு சகஸ்ரநாமத்தை நீங்கள் படிக்க வேண்டும். அல்லது வீட்டில் ஒலிக்க விடலாம். இப்படி செய்வதால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த ஏகாதசி நாளில் குறைந்தது ஒரு 5 பேருக்காவது அன்னதானம் செய்தால் கடன் மற்றும் நோய் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். 

நல்ல வேலை கிடைப்பதோடு, வீடு மனை உள்ளிட்டவை வாங்கும் யோகமும் ஏற்படும். ஆடி மாத ஏகாதசியில் மட்டுமல்லாமல், மாதம் தோறும் வரும் அனைத்து ஏகாதசியிலுமே இப்படி அன்னதானம் செய்தால் அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி, உங்கள் வாழ்வு மேன்மை பெறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishnu Sayana Yekadasi Food Donation Will Solve Debt and Health Issues


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->