உலகக்கோப்பை வில்வித்தை: 5-வது முறை இந்திய வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் நடைபெற்ற  2024-ம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பையின் இறுதிப்போட்டயில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மெக்சிகோவில் உள்ள ட்லாக்ஸ்காலாவில் 2024-ம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர். இதில் சீன வீராங்கனை லி ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து, இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், வில்வித்தை உலகக்கோப்பையில், தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன்னதாக நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் தீபிகா குமாரி நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.

இதற்கிடையே நடப்பு ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் வில்வித்தையில் , இந்திய வீராங்கனை  தீபிகா தொடக்கத்தில் இருந்து  அதிரடியாக விளையாடி புள்ளிகள் சேர்ப்பில் ஈடுபட்டார். இதில், 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தி தீபிகா காலிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Archery world cup india wins silver medal for 5th time amazing


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->