இலங்கையை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி.. 3வது ஒருநாள் போட்டி இந்திய அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடியது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய உம்ரான் மாலிக் மற்றும் ஹார்திக் பாண்டியா  ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சூரிய குமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடுகின்றனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த போது ஆட்டம் இழந்தார். அவருடன் களம் இறங்கிய சுமன் கில் 116 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 85 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

அதன் பிறகு களம் இறங்கிய கே.எல் ராகுல் 7 ரன்களிலும் ஸ்ரேயஸ் ஐயர் 38 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி தனது அதிரடி ஆட்டங்களால் 166 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்ஸர்கள் உட்பட 13 பவுண்டரிகள் அடங்கும். இலங்கை அணி தரப்பில் கசும் ரஜிதா, லகிரு குமார தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக இலங்கை அணி 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனையடுத்து 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மேலும், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won by 317 runs against srilanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->