இங்கிலாந்துக்கு எதிரான 02வது டி-20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அணிக்கு எதிரான 02வது டி-20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 02 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி,  20 போவார்கள்  நிறைவில், 09 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 

அணியின் சார்பாக ஜோஸ்பட்லர் 45 ரன்களும், ஸ்மித் 22 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் அக்சர்படேல் , வருண் சக்கரவர்த்தி தலா 02 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிசேக் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களை எடுத்து அவுட்டானார்கள். 

திலக் வர்மா கடைசி வரை நின்று 72 ரன்கள் எடுத்தார்.அவருடன் துணை நின்று வாஷிங்டன் சுந்தர் 26 ரன்கள் எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிசேக் ஷர்மா 12 ரன்கள், சஞ்சு சாம்சன் 5 ரன்கள்,, சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி 19.2 ஓவரில் 08 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India won the 2nd T20 against England


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->