ஐஎஸ்எல் கால்பந்து, சென்னை - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா.! - Seithipunal
Seithipunal


ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை - ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்குகிடையேயான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

எட்டாவது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. நேற்று வாஸ்கோடாகாமாவில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய இரண்டவது நிமிடத்திலேயே ஈஸ்ட் பெங்கால் அணி வீரர், ஹீரா மாண்டல் சேம் சைடு கோல்படித்து எதிரணிக்கான கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனால் ஈஸ்ட் பெங்கால் அணியின் ரசிகர்கள் கோபமடைந்தனர். 

அடுத்து ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் நிந்தோய்ங்கன்ப மீதேய் ஒரு கோல் அடிக்க சென்னை அணியின் கோல் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியில் ஈஸ்ட் பெங்கால் வீரர்கள் எழுச்சி கண்டனர். இதனால் சென்னை அணியால் இரண்டாவது பாதியில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. ஈஸ்ட் பெங்கால் அணிக்கு ஆட்டத்தின் 61 -வது நிமிடத்தில் கிடைத்த "பிரீகிக்" வாய்ப்பில் டேரன் சிடோ கோல் அடித்து ஈஸ்ட் பெங்கால் அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஈஸ்ட் பெங்கால் "ஸ்டாப்பேஜ் நேரம் " எனப்படும் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது. 

சென்னை அணி இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி, 4 ட்ரா என தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. பெங்கால் அணி 10 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற்று மற்றொரு லீக் ஆட்டத்தில் மோகன் பாகான் - மும்பை அணிகள் மோத உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISL Football Chennai vs Bengal Match Drawn


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->