புரோ கபடி, உ.பி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாட்னா அணி அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி உத்திரபிரதேச அணியை 37-35 என்ற கணக்கில் வீழ்த்தியது.

12 அணிகள் பங்கேற்றுள்ள எட்டாவது புரோ கபடி லீக் போட்டித் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாட்னா அணியும், உத்திரபிரதேச அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி 18-11 என முன்னிலையில் இருந்தது. பின்னர் எழுச்சி கண்ட உ.பி. அணி அடுத்தடுத்து 4 புள்ளிகளை பெற்று ஆட்ட நேரத்தின் முதல் பாதி முடிவில் 15-20 என பாட்னா அணியை விட 5 புள்ளிகள் மட்டுமே பிந்தங்கி இருந்தது. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை பெற ஒரு கட்டத்தில் 28-28 என சமநிலையில் இருந்தன. இதனையடுத்து ஆட்டத்தில் மேலும் தீவிரத்தை காட்டிய பாட்னா அணி வீரர்களால் அந்த அணி 35-32 என முன்னிலை பெற்றது.

சிறப்பாக ஆடிய பாட்னா அணி ஆட்டநேர முடிவில் 37-35 என்ற புள்ளி கணக்கில் உ.பி. அணியை வீழ்த்தியது. 12 அணிகள் கொண்ட புரோ கபடியில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவில் முதலிடத்தில் டில்லியும், இரண்டாவது இடத்தில் பெங்களூருவும், மூன்றாவது இடத்தில் பாட்னா அணியும் 4-வது இடத்தில் ஹரியானா அணியும் உள்ளன. தமிழ்த் தலைவாஸ் அணி 9 - வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pro Kabadi Patna defeated UP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->