புரோ கபடி லீக்! அரை இறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.

எட்டாவது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பாட்னா மற்றும் டெல்லி அணிகள் நேரடியாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

அடுத்த 4 இடங்களைப் பிடித்த உத்திர பிரதேசம், குஜராத், பெங்களூர் மற்றும் புனே ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், நேற்று பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்றன.

முதல் சுற்றில் உத்திர பிரதேச அணியும், புனே அணியும் மோதின. இதில் உத்திர பிரதேச அணி 42 - 31 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு பிளே ஆப் ஆட்டத்தில் குஜராத் அணியும், பெங்களூரு அணியும் நேரடியாக களம் கண்டன. இதில் அதிரடியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 49 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா அணியுடன் உத்திர பிரதேச அணியும், டெல்லி அணியுடன் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro Kabbadi semi finals


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->