பஞ்சாப் அணி வெற்றி..தொடர் தோல்வி குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, கொல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் பிளேஆப் சுற்றுக்குள் சென்றுவிட்டன. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 65வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும் பிளேஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணியும் மோதின. 

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கி ஜெய்ஸ்வால் மற்றும் காட்மோர் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்களும் அஸ்வின் 28 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது.

போட்டியின் இரண்டாம் பாதியில் 145 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 145 ரன் அடித்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி 4 போட்டிகளாக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. தொடர் தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், " நாங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறோம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இது எதனால் என்று கண்டறிய வேண்டும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குகான நேரமிது. வரும் போட்டிகளில் சாதகமாக அமையும் என்று நம்புகிறேன் என்று இவரு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab team win continued loss Rajasthan team


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->