சிறப்பு பூஜையை முடித்து விட்டு உலகக்கோப்பையில் விளையாட சென்ற ரோகித் சர்மா.. கப்பு முக்கியம் பிகிலு.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலக கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பியுள்ளார். 

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் ஜாஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஹர்ஸல் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு பட்டியல் வீரர்கள் : முகம்மது ஷமி, தீபக் சஹார், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rohit Sharma and family prayed temple before flying to T20 world cup


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->