மழையால் IPL இறுதிப்போட்டி ரத்தாகுமா... அப்போ கோப்பை யாருக்கு? - Seithipunal
Seithipunal


2024ம் ஆண்டு IPL போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தியதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் மோதின.

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் IPL 2024ம் ஆண்டின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகளைத் தவிர்த்து வேறு அணி IPL கோப்பையை வெல்லப்போவதை பார்ப்பதற்காக IPL ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர். 

ஆனால் சென்னையில் இன்று மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மாலை மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறினாலும், போட்டியை மழை பாதிக்காது. எனவே திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. போட்டியின் போது மழை பெய்யாது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பயிற்சி ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது IPL ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்தானால், போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படும். அப்போதும் மழை குறுக்கிட்டால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who will win the IPL final if match cancelled due to rain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->