#ASIACUP2022 : தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் முதல் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் இந்திய அணி 6 போட்டிகளில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள தாய்லாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. இந்தியர்கள் அதிரயாக விளையாடிய ஷபாலி வர்மா 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதோபோல் இன்று மதியம் நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் அக்டோபர் 15ம் தேதி இறுதிப்போட்டியில் விளையாடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens Asia Cup india beat Thailand into finals


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->