ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி.. இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற்ற 13வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதா தார் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்த்ரகர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி  தொடக்கம் முதலே தடுமாறியது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சினால் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி  3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும் இந்திய அணி நெட்ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens Asia Cup Pakistan beat India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->