ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. தாய்லாந்திடம் மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் அணி.!  - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து, தாய்லாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்ற 10வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - தாய்லாந்து அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 116 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அமீன் 56 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. தாய்லாந்து அணியில் அதிகபட்சமாக நத்தகன் சந்தம் 51 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து தாய்லாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens Asia Cup Thailand beat Pakistan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->