#ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்திய அணி அபார பந்துவீச்சு.. தாய்லாந்து 37 ரன்களுக்கு ஆல் அவுட்.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 37 ரன்களுக்கு சுருட்டியுள்ளது இந்திய அணி.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் 19வது லீக் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பௌலிங் தேர்வு செய்தது.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 5 போட்டிகளில் விளையாடியுள்ள தாய்லாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து அணி இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகியுள்ளது. சினே ராணா 3 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும்  ராஜேஸ்வரி கயக்வாட் தலா 2 விக்கெட்டுகளும், மேக்னா சிங் 1 விக்கெட் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens Asia Cup Thailand target of 38 against India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->