குளிர்பானம் என நினைத்து பெயிண்ட் தின்னரை குடித்த 10 மாத குழந்தை பரிதாப பலி..கடலூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்.  இவருக்கு திருமணமாகி பரமேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகனும் உள்ளனர். அறிவழகன் வெளிநாட்டில் வேலைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், திருவிழாவிற்கு அவரது தாய் வீட்டிற்கு பரமேஸ்வரி குழந்தைகளுடன் சென்றார். அப்போது, இரண்டாவது மகன் கிஸ்வந்த் விளையாடி கொண்டிருந்த போது தவறுதலாக பெயிண்டிங் வேலைக்குப் பயன்படுத்தப்படும் தின்னரை குடித்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்ச்சை பலனின்றி பரிதபாமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 months baby death Near Cuddalore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->