#தமிழகம் || 10 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை., பெரும் அதிர்ச்சியில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையை அடுத்த சீர்காழியில் 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 14 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் 10 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுவன் அந்த சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரியப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பாட்டி சந்திரா சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சீர்காழி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து 14 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுவன் கைது செய்யப்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 years child arrest for harassment case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->