#ஈரோடு : 150 கிலோ கஞ்சா பறிமுதல்! போலீஸ் விசாரணை!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் சாணார்பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் வீட்டில் இருந்தது 150 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சில மாதங்களாகவே கஞ்சா போன்ற போதைப்பொருள்களின் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் போதை பயன்படுதோர் எண்ணிக்கையும் போதைப்பொருள்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

சில வாரங்களாக சிறிய கஞ்சா பொட்டலங்கள் ஈரோடு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வந்தநிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பெயரில் வெள்ளோடு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில்,  வெள்ளோடு காவல் துறைக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து , வெள்ளோடு காவல் துறையினர் மற்றும் பெருந்துறை வட்டாச்சியர் சோதனை செய்தனர்.

 சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கபட்டது. 150 கிலோ கஞ்சாவை காவல் துறை பறிமுதல் செய்து அப்பகுதியை சேர்ந்த 3 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்திவரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

150 kg of ganja seized in Erode Police investigation


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->