#மதுரை || பள்ளியில் மரம் விழுந்து 16 மாணவர்கள் காயம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் தெற்குத்தெரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த பெரிய ஆலமரம் மரம் வேரோடு விழுந்ததில் 9ம் வகுப்பு படிக்கும் 16 மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்தவர்களின் 13 பேர் மாணவிகள் மற்றும் 3 பேர் மாணவர்கள் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மாணவ மாணவிகள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 students injured after tree falls in school in Madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->