18 கல்வி அலுவலர்களின் நியமனம் ரத்து.!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையை உரிய முறையில் பின்பற்றப்படாததால் இந்த நியமத்திற்கு எதிராக ஒரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் 4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் கடந்த ஆட்சியில் மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 18 பேரும் அதிர்ச்சிகள் ஆழ்ந்துள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கான புதிய தேர்வர்கள் இன சுழற்சி முறையில் இன்னும் 4 வாரங்களுக்குள் தேர்வு செய்து நியமனம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 district education officer appointment cancelled by MadrasHC


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->