'பரோட்டாவுக்கு பாயா' கேட்டு ஹோட்டலில் ரகளை.! 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் புரோட்டாவுக்கு பாயா கேட்டு ஹோட்டலில் ரகலையில் ஈடுபட்ட இரண்டு போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவெற்றியூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் திருவெற்றியூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசார், சாப்பிடுவதற்கு சென்றுள்ளனர். அப்பொழுது மது போதையில் இருந்த போலீஸ்காரர்கள், ஓட்டல் ஊழியர்களிடம் பரோட்டாவிற்கு பாயா கேட்டு ரகலையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹோட்டல் ஊழியர்களை மிரட்டியும், ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு வழி விட மறுத்து, அவரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் உரிமையாளர் திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் ஹோட்டலில் போலீஸ்காரர்கள் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து, ஹோட்டலில் ரகளை ஈடுபட்ட போலீஸ்காரர் கோட்டமுத்து மற்றும் தனசேகர் ஆகிய இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டார். இதயடுத்து, மற்ற மூன்று போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 policemen suspended for rioting in a hotel asking for paya for Parotta in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->