ரெட் அலர்ட் எதிரொலி - 4 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமையில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 districts school and colleges leave tomarrow for red alert


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->