#சென்னை சிறுதானிய பெருவிழாவில் 551 கிலோ கேக்.! உலக சாதனை நிகழ்வு.!
551 KG sirudhaniya Cake in Chennai Food festival
தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆகியவை இணைந்து மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா மற்றும் உலக சாதனை நிகழ்வு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
நாட்டு மக்களிடம் சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த உணவு திருவிழா மற்றும் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் 11 கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சிறுதானியங்களில் உணவு பொருட்களை செய்து அரங்குகளில் காட்சிப்படுத்தினர்.

மேலும், 551 கிலோ அளவிலான சிறு தானிய கேக் செய்து சாதனை நிகழ்வு இந்த உணவுப் பெருவிழாவின் போது நடத்தப்பட்டது. சிறுதானியங்களைக் கொண்டு 17 அடி நீளம் ஏழு அடி அகலத்தில் 551 கிலோ அளவு கொண்ட கேக் செய்து சாதனை புரிந்தனர்.
இந்த சாதனை நிகழ்வு டிரம்ப்வேர்ல்டு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
English Summary
551 KG sirudhaniya Cake in Chennai Food festival