கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களில் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்படுகிறது. இதனைத் தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அங்கு மேற்கொண்ட தீவிர சோதனையில், ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான் மற்றும் இப்ராஹிம், மன்சூர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் செங்குன்றம் அருகே குடோனில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 kilo drugs seized in kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->