சுற்றுலா பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்!...குற்றால அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம்,  குற்றாலத்தில் பிரபல சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். இங்கு குற்றால சீசன் காலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் போது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தென்காசி, பழைய குற்றால அருவியில் இந்த மாதம் 10-ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரான நிலையில்,  இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A good news for tourists bathing in coutralam waterfall is allowed from today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->