ஈரோடு: சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவு சாலையில் பவானி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது செல்லியாண்டி அம்மன் பூக்கடை அருகே சட்டவிரோதமாக ஒருவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு மது பாட்டில்கள் விற்பனை செய்தவரிடன் விசாரணை மேற்கொண்டதில், பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன்(44) என்பதும், அவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக குணசேகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person arrested for Liquor selling in erode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->