முதுகெலும்பில்லாத கமல்ஹாசன்! 16 பேர் செத்து 2 நாள் கழித்து, ஆர அமர தோழமை சுட்டிய நடிகர் கமலஹாசன்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த இரு நாளாக தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பையும், ஆளும் திமுகவிருக்கு எதிரான கண்டன குரலும் வலுக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மநீம கட்சி விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு  இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.

இதுபோன்ற கோரசம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பலநேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம்.  

இப்போது அப்படியில்லாமல் தமிழ்நாடு காவல்துறை,  கள்ளச்சாராயம்  தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணைபோவோர் உள்ளிட்ட அனைவர் மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும். கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று, அவர் நடத்திவரும் மக்கள் நீதி மய்யம் சார்பாக வலியுறுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

2 நாளாக தமிழகமே அதிர்ந்து போய் கிடக்க, ஆர அமர தனது தோழமை நடத்தும் அரசுக்கு, தோழமை சுட்டுகிறாரா நடிகர் கமல்ஹாசன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிலும் ஒரு நெட்டிசன், "முதுகெலும்பில்லாத கமல்ஹாசன், ஏன் இவ்வளவு மென்மையா சுட்டி காட்டுறிங்க" என்று பின்னுன்னூட்டமிட்டுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Kamalhaasan say about kalla sarayam death issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->