ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.

கடந்த இரு மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பழனியம்மாள், கடந்த வாரம் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அரசியல் பணிக்கு மத்தியிலும் தனது தாயாரை ஓபிஎஸ் மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு, சென்னைக்கும் தேனிக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு உடல்நிலை மிகவும் மோசமானதால், மருத்துவமனையில் இருந்து அவரை பெரியகுளத்தில் உள்ள இல்லத்திற்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.

நேற்று இரவு 10:20 மணியளவில் அவர் காலமானார். ஓ.பன்னீர்செல்வம் தாயாரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் இறப்புக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Mourning To OPS Mother death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->