சென்னையில் விலையில்லா தேநீர் கடை! அசத்திய அதிமுக - அகற்ற முயலும் மக்கள் விரோத திமுக - கொதிக்கும் ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


சென்னையில் அதிமுக சார்பில் மக்கள் நலன்கருதி அமைக்கப்பட்ட விலையில்லா தேநீர் கடையை, ஆளும் திமுக ஆட்சியாளர்கள் அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தல்! மழைக்காலத்தில் தேநீர் பந்தல்! என அதிமுக சார்பில் மக்கள் பயனடைவதை பார்த்து தடுத்து நிறுத்த துடிக்கின்றனர் மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்கள்!

இராயபுரம் 48-வது வட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் கடந்த வாரம் தேநீர் பந்தல் என்னால் திறக்கப்பட்டது.

மாலைநேரங்களில் தேநீர்,பால்,சுக்கு காபி,பலகாரம் என பல பொருட்கள் மக்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது‌.

இன்றைய தினம் மக்கள் தினந்தோறும் பயனடவதை பார்த்த திமுகவினர் மாநகராட்சி அதிகாரிகளை ஏவி விட்டு தேநீர் பந்தலை அகற்ற முயற்சி செய்கின்றனர்.

மக்கள் பணியும் செய்யாமல் யாரையும் செய்ய விடாமலும் பார்த்து கொள்வதில் திமுக அரசு தெளிவாக உள்ளது.

இதற்கு தான் மாநகராட்சி அதிகாரிகளை திமுகவின் ஒரு அணியினரை போல் பயன்படுத்தி வருகின்றனர். அராஜகமும் அநீதியும் அழிவுக்கு வழிவகுக்கும்!

மக்களுக்கு தொண்டாற்றும் எங்களை‌ போன்றோரை முடக்கவோ அடக்கவோ நினைப்பது முடியாத காரியம்!

அந்த ஒரு இடத்தில் தேநீர் பந்தல் அகற்றப்பட்டால் தெருவுக்கு தெரு தேநீர் பந்தல்கள் திறக்கப்படும். FascistDMKGovt " என்று ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Condemn to DMK Govt for Thenir Panthal issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->