அண்ணா பல்கலை முன்பு போராட்டம் - அதிமுகவினர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மாணவர் சங்கம் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் படி அண்ணா பல்கலைக்கழக வளாகம் முன்பு அ.தி.மு.க.வின் மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்களால் மாணவர்களுக்காக ஒன்றிணைவோம் என்ற பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

ஆனால், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்த நிலையில் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசாரர் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk partys arrested for protest in chenna anna university


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->